அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" என்ற எண்ணக்கருவை யதார்த்தமாக்கும் வகையில்
கூட்டுத்தாபன உள்நாட்டு வாசனைச் சரக்குப் பொருட்களை வாடிக்கையாளர் பொது மக்களுக்கு சுத்தமாகவும் மலிவு விலையிலும் பெற்றுக்கொள்ள முடியுமான வகையில் "வாசனைச் சரக்குக் கட்டிடம்" 2021.08.16 ஆந் திகதியன்று இலக்கம் 74, கடுவெல வீதி, பத்தரமுள்ள என்ற இடத்தில் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு வாசனைச் சரக்கு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் பொருளாதாரத்தை வலுவூட்டல் மற்றும் வாடிக்கையாளர் பொது மக்களுக்கு மலிவான விலையிலும் உயர் தரத்துடனும் பொருட்களை வழங்குவது இதன் அடிப்படை நோக்கமாக உள்ளது.
இந்நிகழ்வுக்கு கெளரவ பெருந்தோட்ட அமைச்சருடன் கெளரவ வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள், சிறு தோட்ட பயிர் வளர்ச்சி தொடர்பான கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கெளரவ இராஜாங்க அமைச்சர் ஜானக வக்குபுர அவர்கள், அமைச்சின் செயலாளர்கள் உள்ளடங்கலாக மட்டுப்படுததப்பட்ட அளவினோர் கலந்து கொண்டார்கள்.
வாசனைச்சரக்குப் பொருட்களுக்கான கட்டிடத்தை திறந்து வைக்கும் விழாவில் கலந்து கொள்ளல்
Latest News
- The Government of China's Hainan Province has formally conveyed its consent to supply a technologically advanced rice mill to the Angunakolapalassa Jandura area.
- நேரடி தேயிலை செடிகளை பயிர்செய்கையிடும் திட்டம்
- உரோமில் நடைபெற்ற சர்வதேச தேயிலை தினக் கொண்டாட்டம்
- ஜப்பானில் இலங்கை பெஸ்டிவெல் ( Sri Lanka Festival) இல் செவ்விளநீருக்கு நல்ல கேள்வி
- அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான கோமர தோட்டத்தில் அமைந்துள்ள மீள புனரமைக்கப்பட்ட தேயிலைத் தொழிற்சாலையை திறந்து வைத்தல்