அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" என்ற எண்ணக்கருவை யதார்த்தமாக்கும் வகையில் இந்நாட்டின் தேயிலைச் செய்கையை கட்டியெழுப்பும் வகையில் அவசியப்படும் தரமிக்க உயர் தேயிலைச் செடிகளை, தோட்டக்காரர்களுக்கு விநியோகிக்கும் நோக்குடன் அவசியப்படும் 25 மில்லியன் தேயிலைச் செடிகளை விசேட திட்டத்தின் கீழ் காலி மாவட்டத்தில் முளையிடச் செய்பவர்களுக்கு உதவி வழங்கும் மற்றொரு கட்டமாக 2021.07.14 ஆந் திகதி கராபிடிய பிரதேசத்தில் நடைபெற்றது.
இதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ள இம்முளையிடச் செய்யும் திட்டத்தின் முதல் செடிகளின் இருப்பு அரசினால் கொள்வனவு செய்யப்பட்டு சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு விநியோகிக்கும் செயற்பாடு இடம்பெற்றது.
பெருந்தோட்ட அமைச்சுக்கு உரித்தான சிறிய தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் வழிகாட்டலின் கீழ் இச்செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இதன் போது முளையிடச் செய்பவர்களுக்கான காசோலைகளும் தண்ணீர் மோட்டார் இயந்திரங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு, கெளரவ அமைச்சருடன் நிறுவன தோட்ட சீர்திருத்தங்கள் கெளரவ இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் அவர்கள், சிறு தேயிலைத் தோட்ட அதிகார சபையின்
25 மில்லியன் தேயிலைச் செடிகளின் விசேட திட்டத்தின் கீழ் காலி மாவட்டத்தில் உள்ள முளையிடச் செய்பவர்களுக்கு உதவி வழங்குதல்
Latest News
- The Government of China's Hainan Province has formally conveyed its consent to supply a technologically advanced rice mill to the Angunakolapalassa Jandura area.
- நேரடி தேயிலை செடிகளை பயிர்செய்கையிடும் திட்டம்
- உரோமில் நடைபெற்ற சர்வதேச தேயிலை தினக் கொண்டாட்டம்
- ஜப்பானில் இலங்கை பெஸ்டிவெல் ( Sri Lanka Festival) இல் செவ்விளநீருக்கு நல்ல கேள்வி
- அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான கோமர தோட்டத்தில் அமைந்துள்ள மீள புனரமைக்கப்பட்ட தேயிலைத் தொழிற்சாலையை திறந்து வைத்தல்