கெளரவ பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதிக் கமத்தொழில் அமைச்சர் 2020.02.16 ஆந் திகதி தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு பயணித்தார். அங்கு அவ்வாராய்ச்சி நிறுவனத்தின் சேவையை மெச்சிய அவர் எதிர்வரும் காலங்களில் தேயிலையின் தரத்தை மேலும் அதிகரித்து, அதன் மூலம் தேயிலை ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சி செய்ய வேண்டுமென சகல உத்தியோகத்தர்களையும் விழித்துப் பேசினார்.